top of page


லண்டனிலிருந்து அன்புடன் - 2
கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர்.

பஞ்சுமிட்டாய் பிரபு
May 15, 20252 min read


பேசும் கடல்
” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது

சகேஷ் சந்தியா
May 15, 20252 min read


கனவு பயணம்
அவள் ஆசைகளை அவளே மெட்டு போட்டு பாடுவாள். ஒரு நாள் அவளோட வகுப்பறையை கடந்து போனார் மகா லட்சுமி டீச்சர். விஜி பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு சத்தம் கேட்டு உள்ளே வந்தார் . அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அமுதா செல்வி
May 15, 20253 min read


சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை
சிறார்களுக்கு எந்த
உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும்
மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால்
போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்

ஈரோடு சர்மிளா
May 15, 20252 min read


சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்
"இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

நாராயணி சுப்பிரமணியன்
May 15, 20252 min read


ஸ்டீவன் ஹாகிங்
இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங்.

பூங்கொடி பாலமுருகன்
May 15, 20252 min read


கட்ட வண்டி
தன்னானே பாட்டுப் பாடிக்கிட்டு
தரணி எங்கும் சுத்திடுவோம்.

கவி பாரதி
May 15, 20251 min read


பனியை மாற்றிய பருத்தியும், கறுப்பியும்
பனியும், பருத்தியும் தினமும் மாலை குளக்கரையில் விளையாடுவார்கள். வானில் மேகங்கள் கூடி, மழைக்கான அறிகுறி தெரிந்தால், பனி மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடும், பருத்தி முயல் இனிமையாக ஒரு பாடலைப் பாடும். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் களைகட்டும்.

கொ மா கோ இளங்கோ
May 15, 20253 min read


“நான் கதைகளை நேசிக்கிறேன்”
ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள்
எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன்.

வே சங்கர்
May 15, 20256 min read


எல்லை இல்லா இயற்கை
அண்டை இருந்த மரத்தின் குயிலும்
கூவி இசையைப் பொழிந்தது.
அடுத்த ஊரின் ஏரி நீரும்
கிணற்றின் ஊற்றாய் நிறைந்தது.

வெற்றிச் செழியன்
May 15, 20251 min read


ஏன் பிறந்தோம் - 2
நாம் இப்போது நினைப்பது போல அத்தனை எளிதாக இந்தச் செயல் நடக்கவில்லை. மனிதமூளையில் சிந்தனை என்ற இரசாயனச்செயல் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின.

உதயசங்கர்
May 15, 20252 min read


பாடிக்கிட்டே படிக்கலாம்!
பாடப் புத்தகங்கள் மொழி கற்றலில் அது நேரடியாக செயல்படும். கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படை பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என பல்வேறு இலக்கிய வகைமைகள் மூலம் கொடுக்க முடியும்.

சாலை செல்வம்
May 15, 20252 min read


குழந்தையிடம் அம்மா செல்வது எப்படி?
குழந்தை அம்மவிடம் செல்ல உதவுங்கள் செல்லக்குட்டி! படம் உதவி: நாஜலட்சுமி நாராயணசாமி

ராஜலட்சுமி நாராயணசாமி
May 15, 20251 min read


சகுந்தலா தேவி
அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார்.

சரிதா ஜோ
May 15, 20253 min read


விடுகதைகள்
மூன்று பெண்ணுக்கும் ஒரே முகம்; மூத்த பெண் ஆற்றிலே; நடுப் பெண் காட்டிலே; கடைசிப் பெண் வீட்டிலே. அவர்கள் யார் யார்?

ஞா.கலையரசி
May 15, 20251 min read


சவரக்கத்தி
மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும்.

ஹேம பிரபா
May 15, 20252 min read


குழந்தைகளின் உரிமைகள் – 2
காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை !

கமலாலயன்
May 15, 20252 min read


Adolescence web series - 1
வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு.

கலகல வகுப்பறை சிவா
May 15, 20252 min read


புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம்!
நாம பொறக்குறதுக்கு முன்னாடி அம்மா வயித்துக்குள்ள இருந்த காலத்திலேர்ந்தே, அது நம்மை இழுத்துக்கிட்டுதான் இருக்கு. அதனால, அது இழுக்குறது நமக்கு தனியாத் தெரியாது. அது இருக்கிறதுனாலதான் நாம எல்லாரும் நடக்க, ஓட, விளையாட முடியுது. விண்வெளிக்குப் போய்ட்டா புவி ஈர்ப்பு விசை இருக்காது. அதனாலதான் விண்வெளில வீரர், வீராங்கனைகள் மிதக்குறாங்க.
புத்தகப் புழு
May 13, 20252 min read
bottom of page



