ஏழு ஹைக்கூ
- சிறார் படைப்பாளி

- Jun 15
- 1 min read

நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு
இளைப்பாறக் கிடைக்கவில்லை
காடு
*
அம்மா கால் பித்த வெடிப்பு
பாசத்தின் பள்ளத்தாக்கு,
கற்துகளும் விரும்பி உட்புகும்
*
ஊரை காக்க விரும்பும் அய்யனார்
எல்லையை தாண்டி
ஊருக்குள்ளே வாழ விரும்பாதவர்.
*
நீருக்கும் மனிதன்மேல் பயம்,
சருவலைக்காரணம் காட்டி,
கடலை அடைகிறது
*
நரியின் குழியில் விழுந்த
புலிக்கூட்டம்
இன்னும் இழக்கவில்லை வீரத்தை
(இலங்கை சம்பவத்தின் அடிப்படையில்)
*
புத்தகத்தை புரட்டிடும்
மனிதன் இருவிரலால்
தன் வாழ்வையே புரட்டுகிறான்.
*
யானையைகாட்டிலும்
மனிதனிடமே அதிகம் உள்ளது
மதம்.
எழுதியவர்:
ஹ. சக்திவேல்,
11ஆம் வகுப்பு,
இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம்.
8015626376




சிறப்பு. நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதவும்.