இறக்கை
- பாவண்ணன்

- 2 days ago
- 1 min read

எனக்கு மட்டும் இறக்கை இருந்தால்
உச்சி வானில் பறப்பேன்
வெள்ளைப் பஞ்சு மூட்டை போன்ற
மேகம் நடுவில் மிதப்பேன்
ஏரி குளங்கள் ஆற்றையெல்லாம்
நொடிப்பொழுதில் கடப்பேன்
எல்லா மரங்களின் உச்சிக் கிளையிலும்
இறங்கி ஓய்வு எடுப்பேன்
ஆசை வேகம் அடங்கும் வரைக்கும்
ஆனந்தமாகத் திரிவேன்
பசிக்கும் போது தரைக்கு வந்து
அடுத்த நொடியே பறப்பேன்

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.





Comments