top of page

வைரக்கல்


குளத்தில் நிறைய தண்ணீர் இருக்குது

குட்டிப் பாப்பா

தாமரைப்பூ பூத்திருக்குது

சின்னப் பாப்பா

பூவைச் சுற்றி இலைகள் மிதக்குது

குட்டிப் பாப்பா

வட்டத் தட்டென சூழ்ந்திருக்குது

சின்னப் பாப்பா

இலையில் உருளும் தண்ணீர்த் துளிகள்

குட்டிப் பாப்பா

வைரக் கல்போல் தகதகக்குது

சின்னப் பாப்பா

பாவண்ணன்
பாவண்ணன்

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page