முகமெனும் திரையில்
- ஷீலாராஜன்

- 2 days ago
- 1 min read

வானூர்தியின் சத்தம் கேட்கும் போது
பேருந்தில் சிரிக்கும் குழந்தையை காணும் போது
நட்டு வைத்தச்செடியில் பசுந்துளிரைப் பார்க்கும்போது
நாளை மலர காத்திருக்கும் பூ மொட்டை கண்டபோது
கோழிக்குஞ்சுகள் தாயுடன் குடுகுடுவென ஓடும்போது
துள்ளிவரும் ஆட்டுக்குட்டியை காணும் போது
தோள் மீது கை போட்டு நடக்கும் சிறுவர்களை நோக்கும்போது
தந்தையின் கைபிடித்து குதித்து நடக்கும் சிறுவனை காணும் போது
புழுக்கத்தை விரட்டும் காற்றின் உரசலின் போது
துண்டிக்கப்பட்ட மின்சாரம் திரும்ப வரும் பொழுது
அணிந்திருக்கும் புத்தாடை அழகு எனும் போது
கடந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியை கண்டிட்ட போதும்
இன்றும் உணவு கேட்டு காகம் கதவில் அமர்ந்த போதும்
இயற்கையாய் இதழ்கள் விரிகின்றன என்முகமெனும் திரையில்..

தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியரான இவர், ஒரு கதைசொல்லி ஆவார். தமிழ்நாடு அரசின் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகக் கதைகளுக்கான காணொலிகளுக்குப் பின்னணிக் குரல் (Voice-over) கொடுத்துள்ளார். மேலும், பள்ளி ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் எழுத்தாளராகவும், குழந்தைகளுக்கான விழுமியக் கல்வி (Value Education) பாடப்புத்தகக் கதைகளின் ஆசிரியராகவும் பங்களித்துள்ளார்





Comments